நண்பர் பஸ்லி ஹமீட் அவர்களின் கருத்துக்களை நூற்றுக்கு நூறு விழுக்காடு நான் வழிமொழிய வேண்டுமென்றால் எழுத்தாளர் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களின் நூல்கள் யாவற்றையும் அல்லது பெரும்பாலானவற்றையும் நான் படித்திருக்க வேண்டும். நான் இப்போது தான் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களின் வலைத்தளம் வழியாக ஒரு சிலவற்றைத் தெரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன். சுருங்கச்சொன்னால் முதல் படியில் நிற்கிறேன். எனினும் இது வரை நான் வாசித்தவற்றில்; அறிந்தவற்றில் உண்மை நிகழ்வுகள் பலவற்றை அவரது எழுத்துக்கள் எடுத்து வந்து தந்த வண்ணமிருக்கின்றன. அவை பல வகையிலும் படிப்போருக்குப் படிப்பினையாக இருக்கின்றன என்பதை நிச்சயமாக அறுதியிட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். தொடரட்டும் அவரது நற்பணி.
கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.
No comments:
Post a Comment